திருக்கோவிலூர் பகுதியில் கொசுக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற பலவிதமான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே கொசுக்களை கட்டுப்படுத்த அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.