கந்திலி அருகே சந்திரபுரத்தில் இருந்து கந்திலி கிராமத்துக்கு செல்லும் சாலையில் 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் கந்திலிக்கு செல்லும் பாதையை காட்டும் வழிகாட்டி பலகையை முள்செடிகள் சூழ்ந்துள்ளது. வழிகாட்டி பலகை இருப்பதே தெரியாத அளவுக்கு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே வழிகாட்டி பலகையை சுற்றி உள்ள முள்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுரேஷ், கந்திலி.