ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-15 14:36 GMT
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழை பெய்யும் போது மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீரை சேகரிக்க முடியாததால் இப்பகுதியில் வெயில் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்