கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி, முத்தனூரில் தார் சாலை அருகே சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். அனைவரும் கூலி தொழிலாளர்கள். இங்கு குடியிருப்பவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக தங்களது வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பல்வேறு வருவாய் துறைகளிடம் மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை அவர்களுக்கு குடியிருப்பு வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.