விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள், முதியோர்கள், மாணவர்கள் இதனால் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.