பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் சந்துகடைகள் மூலம் மது விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. இதனால் பல குடும்பங்களில் இளம் விதவைகள் அதிகமாக இருக்கிறார்கள். பல இடங்களில் குற்றங்கள் அதிகமாக நடந்துள்ளன. பெண்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மதுபான சந்துகடை அறவே ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.