சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் அசோக் நகர் 2வது தெரு பகுதியில் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசுக்களை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.