திறந்த வெளி பாராக மாறியுள்ள படித்துரை

Update: 2022-09-29 13:40 GMT

கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம்-புனவாசல் சாலையில், வடகட்டளை அய்யனார் கோவில் குளம் உள்ளது. இந்த கோவில் குளத்தின் மூலம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது தண்ணீர் தேவை பூர்த்தி செய்து வந்தனர். இதற்காக அந்த குளத்தில் படித்துரை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த படித்துரையை சிலர் திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மதுகுடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் அந்த படித்துரையை பயன்படுத்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்