பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வேப்பூரில் இருந்து புதுவேட்டக்குடி செல்லும் சாலையில் கருங்குளம் அருகே புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி கடந்த 6 மாதங்களாக மந்தமாக நடந்து வருகிறது. தற்போது அப்பகுதியில் மழை பெய்து வருவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே பாலப்பணிகளை விரைந்து முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.