அரியலூர் மாவட்டம், காவனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கா.அம்பாபூர் கிராமத்தில் காலனி தெருவில் இருந்து மயானம் கொட்டகை வரை கப்பி சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த கப்பி சாலை பஞ்சாயத்து நிதியுதவி மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலனி தெரு பகுதியில் இருந்து மயானக் கொட்டகை பகுதி வரை இருபுறமும் உள்ள நீர் வரத்து வாய்க்காலை சரியாக அகலப்படுத்தவில்லை. மேலும் நீர்நிலை பகுதிகளை சரியாக தூர்வாரமல் இருப்பதாலும், சிலஇடங்களில் மட்டும் பள்ளம் தோண்டி உள்ளதால், மழைநீரும், கழிவுநீரும் ஒன்றாக கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.