மயானத்திற்கு சாலை அமைக்க கோரிக்கை

Update: 2022-08-22 12:08 GMT
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கு மயான சாலை இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். வயல் வரப்புகளை கடந்து மயானத்திற்கு பூத உடல்களை எடுத்துச்செல்லும் அவலநிலையில் உள்ளோம். எனவே எங்களுக்கு மயான சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி