அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் காகங்கவடங்க நல்லூர் பிரிவு சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.