கடையம் யூனியன் திருமலையப்பபுரத்தில் நூலகம் செயல்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இந்த நூலகம் பூட்டப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது வரை இந்த நூலகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே பூட்டிக்கிடக்கும் நூலகத்தை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?