பாதிரிக்குப்பம்- திருவந்திபுரம் செல்லும் சாலையில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதை தவிர்க்க சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா