பழுதடைந்த பாலம்

Update: 2025-08-03 17:43 GMT

கூடலூர் சளிவயல் பகுதியில் இருந்து தருமகிரி செல்லும் சாலையில் உள்ள பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த பாலத்தில் 2 இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த பாலத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்