மது பிரியர்களால் தொந்தரவு

Update: 2022-08-20 14:10 GMT
பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பெரிய ஏரிக்கரையில் இரவு நேரத்தில் மது பிரியர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடிக்கின்றனர். மேலும் அவர்கள் குடி போதையில் சாலையில் செல்பவர்களிடம் தொந்தரவில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த சாலை வழியாக தனியாக பெண்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே ஏரி கரை பகுதியில் யாரும் மது குடிக்க விடாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்