திருச்சி மன்னார்புரத்தில் இருந்து கே.கே.நகர் நோக்கி செல்லும் சாத்தனூர் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டுள்ள பகுதியில் சாலையில் பள்ளமாகவே உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த பள்ளத்தை சரி செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்ற தெரிவித்தனர்.