திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி காலை மற்றும் மாலை வேலைகளில் இப்பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் இந்த பகுதியில் நின்று கொண்டு போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியின் அருகே தரைக்கடைகள் அதிகளவில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
