அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மிகவும் பழுதடைந்த பள்ளி கட்டிடம் உள்ளது. அக்கட்டிடத்தை மாலை நேரங்களில் சிலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தி்ல் மது பாட்டில்களையும் உடைத்து விட்டு சென்று விடுகின்றனர். எனவே பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை கல்வித்துறை அதிகாாிகள் இடித்து அகற்ற வேண்டும்.