நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள வெண்டாங்கி கிராமத்தில் பயணிகள் நின்று செல்ல வசதியாக நிழற்கூடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது இந்த நிழற்கூடம் பயணிகள் பயன்படுத்த முடியாதபடி இருக்கைகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் சிலர் வைக்கோல் கட்டுகளை வைக்கும் இடமாக நிழற்கூடத்தை பயன்படுத்தி வருகின்றனர். நிழற்கூடத்தின் வெளி பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே வெண்டாங்கி பயணிகள் நிழற்கூடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-தங்கம், வெண்டாங்கி, நாமக்கல்.