பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று நகர போக்குவரத்து போலீசார் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதனையும் மீறி வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை அந்த இடத்தில் நிறுத்தி வைத்து விட்டு கடைவீதி, காய்கறி மார்க்கெட், பஸ் நிலையத்துக்கு சென்று வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அங்கு யாரும் வாகனங்களை நிறுத்தாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.