பன்றிகள் தொல்லை

Update: 2022-08-19 14:26 GMT


தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடைமருதூர் தாலுகா,துகிலி கிராமம்,காவேரி நகர் குடியிருப்புகளுக்கு ஏராளமான பன்றிகள் சுற்றி த்திரிகின்றன. மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் செடி, கொடிகளை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், துகிலி.

மேலும் செய்திகள்