பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், பழைய விராலிப்பட்டி கிராமத்தில் உள்ள மயான கொட்டகையின் மேற்கூரை சிதிலமடைந்தும், சுற்றுச்சுவர் இடிந்தும் காணப்படுகிறது. மேலும் மயானத்திற்கு செல்லும் பாதையில் மின்விளக்கு அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.