விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா குடிபுதூரில் உள்ள ஊராட்சிமன்ற பள்ளி கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு பக்கவாட்டு சுவர், செங்கல் பெயர்ந்து உள்ளது. மேலும் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடடிக்கை எடுப்பார்களா?