கரூர் மாவட்டம், நொய்யல் முதல் வேலாயுதம்பாளையம் வரை உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் வெயில் காலத்தில் வெயிலில் நின்றும், மழை காலத்தில் மழையில் நனைந்தும் பஸ்களில் ஏறி சென்று வருகின்றனர். இது குறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து பயணிகள் அவதியுற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.