புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-08-18 15:09 GMT
பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு செயல்படும் பன்மாடி கட்டிடத்தில் 3-வது தளத்தில் அரச மரக்கன்று வளர்ந்திருந்தது. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு, கட்டிடம் பாதிக்கப்படும் நிலையில் இருந்தது. வளரும் அந்த அரச மரக்கன்றை அகற்ற கோரி பொதுமக்களின் கோரிக்கையாக கடந்த 15-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் புகார் பெட்டியில் செய்தி-படத்துடன் வெளியிடப்பட்டது. இதனை கண்ட மருத்துவமனை அதிகாரிகள் அந்த கட்டிடத்தில் வளர்ந்து வரும் அரசு மரக்கன்றை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். நடவடிக்கை எடுத்த மருத்துவமனை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினதந்தி நாளிதழின் புகார் பெட்டிக்கு பொதுமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் செய்திகள்