ராமநாதபுரம் நகராட்சியில் வீட்டு வரி மற்றும் பாதாள சாக்கடை வரியை கட்ட வரும் பொதுமக்கள் சர்வர் கோளாறால் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதனால் பெரியவர்கள், பெண்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் பல மணி நேரம் காத்திருந்தும் வரி பணத்தை கட்ட முடியாமல் திரும்பி செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சர்வர் கோளாறை சரிசெய்ய வேண்டும்.