விருதுநகர் மாவட்டம் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் பல பகுதியில் சேதமடைந்து மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே வரும் நிலை உள்ளது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சேதமடைந்து காணப்படும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.