தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சமீப காலமாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தெருக்களில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் விரட்டி செல்வதால் பல்வேறு விபத்துகளும் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர். ஆகவே, நாய் தொல்லையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.