கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள சேமங்கி செல்வநகரில் அப்பகுதி பெண்களின் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் சுகாதார வளாகத்திற்குள் உள்ள கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நின்றது. இதன் காரணமாக பெண்கள் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். இதன் காரணமாக சுகாதார வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்திற்குள்ளிருந்து கழிவுநீர் செல்ல முடியாமல் உள்ளதை சீரமைத்து பெண்களின் பயன்பாட்டிற்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.