சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. மேலும் அவைகள் ஆடுகளையும் கடித்து கொன்று விடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.