திருச்சி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் இணையவழியில் பத்திரப்பதிவுக்கு முன்பதிவு செய்தாலும் ஒதுக்கப்பட்ட நேரத்தில் பதிவு செய்ய இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து அங்கு பணிபுரிபவர்களிடம் கேட்டால் சர்வர் சரிவர செயல்படவில்லை எனவும், இணையத்திறன் வேகம் மிகவும் குறைவாகவும் உள்ளதாலும் காலதாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.