மது பிரியர்கள் அட்டூழியம்

Update: 2022-08-15 16:26 GMT
பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் வகையில் ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கடையில் இரவு நேரத்தில் மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதுடன் காலி பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து அட்டூழியம் செய்துவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் காலை நேரத்தில் இந்த கடைக்கு வரும் பொதுமக்களின் கால்களில் கண்ணாடி துண்டுகள் குத்தி காயம் ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்