நடைபாதையில் இடையூறு

Update: 2022-08-15 16:10 GMT

கடையநல்லூர் ஆஸ்பத்திரியின் அருகே உள்ள பாப்பான் கால்வாயில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது தொலைபேசி கேபிள்கள், பாலத்தின் நடைபாதையில் போடப்பட்டது. இன்று வரை அகற்றப்படவில்லை. இதனால் நடைபாதைக்கு இடையூறாக உள்ளது. அதற்கு பதிலாக பாலத்திற்கு மேல்புறம் பெரிய இரும்புக்குழாயில் கேபிளை அமைக்கலாம். ஆகவே நடைபாதைக்கு இடையூறாக உள்ள கேபிள்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்