சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் பலர் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். நாய் கடியால் தினமும் பலர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் நாய்கள் வாகனங்களின் குறுக்கே பாய்வதால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.