மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள ரேஷன்கடைக்கு சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே, ரேஷன் கடை சொந்த கட்டிடத்தில் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?