மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.