அரியலூரில் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்யும் வகையில் அரியலூரில் மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மயானத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் மது அருந்துவதும், சட்ட விரோத செயல்களும் நடக்கிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் மயானத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.