பராமரிக்கப்படாத விளையாட்டு அரங்கம்

Update: 2022-08-14 14:27 GMT
அரியலூரில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்து நடைப்பயிற்சி செல்லவும், இளைஞர்கள் விளையாடவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விளையாட்டு அரங்கம் பராமரிப்பு இன்றி உள்ளதால் பொதுமக்களும், இளைஞர்களும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அரியலூர் விளையாட்டு அரங்கத்தை சீரமைப்பு செய்வதுடன் பொதுமக்களுக்கு மேலும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்