விருத்தாசலம் அடுத்த பரவலூரில் மணிமுக்தாறு தடுப்பணை அமைந்துள்ளதால் இருபுறமும் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வந்த வெள்ளத்தால் கரைகளில் இருந்த கருங்கற்கள் பெயர்ந்து சரிந்து வருகின்றன. மழைக்காலம் மீண்டும் தொடங்க உள்ளதால் வெள்ளம் வருவதற்குள் தடுப்பணையின் நலனை கருத்தில் கொண்டு, பல கோடி பணம் விரயமாவதை தடுக்கும் பொருட்டு கரையைப் பலப்படுத்த வேண்டும்.