திருச்செந்தூர் தாலுகா குலசேகரன்பட்டினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. பழைய கட்டிடத்தில் இ்யங்கி வரும் இங்கு நோயாளிகளின் பாதுகாப்பு கருதி மருந்தகம், தடுப்பூசி செலுத்தும் அறை, ஸ்கேன் அறை, செவிலியர் அறை அனைத்தும் ஒரே அறையில் செயல்பட்டு வருகிறது. பழுதடைந்த கட்டிடங்கள் மூடப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் புதர்கள் மண்டி கிடக்கிறது. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?