சிதம்பரம் தாலுகா சிவபுரி ஊராட்சி காளவாய் மேட்டுத்தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.