சேதம் அடைந்த தடுப்புச்சுவர்

Update: 2022-08-13 16:14 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் நுழைவுவாயின் அருகே கழிவுநீர் கால்வாயின் மேல் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் இடிந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள், பக்தர்களின் நலன்கருதி அங்குள்ள கழிவுநீர் வாய்க்கால் மேல் சேதம் அடைந்து காணப்படும் தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயசீலன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்