அரியலூர் வட்டத்தில் நாகலூர் ஓடை அமைந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இந்த ஓடை வழியாக நிறைய ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் நிரம்பி விவசாய நிலங்களுக்கு பயனைந்து வருகின்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதுடன், செடி-கொடிகள் மற்றும் மரங்கள் அடர்ந்து நீர் முழுவதும் பாசனத்திற்கு வருவது இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.