கோத்தகிரி அருகே காத்துகுளி கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே மரம் ஒன்று சாய்ந்து, எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது. எனவே குடியிருப்புகள் மீது மரம் விழுந்து விபத்தை ஏற்படுத்தும் முன் அபாயகரமாக உள்ள அந்த மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.