ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆண்களுக்கான கழிப்பிடம், தொடர் பராமரிப்பு இன்றி கடந்த பல மாதங்களாக பூட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் நோயாளிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த கழிப்பிடத்தை திறந்து, முறையாக பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.