விளம்பர போர்டுகளால் விபத்து அபாயம்

Update: 2022-08-12 17:29 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள ராசிபுரம் மெயின் ரோட்டில் வணிக ரீதியான கடைகள் செயல்பட்டு வருகிறது. அந்த கடைகளுக்கு முன் விளம்பர போர்டுகள் வைக்கப்படுகிறது. அந்த போர்டுகளால் அந்த வழியாக செல்லும் பஸ், லாரி போன்ற பெரிய வாகனங்கள் எதிரே மற்ற வாகனங்கள் வரும்போது திரும்ப முடியாமல் சிரமப்பட்டு வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே விளம்பர போர்டுகளால் விபத்து ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாராயணன், சேந்தமங்கலம்

மேலும் செய்திகள்