திறக்கப்படாத புதிய வகுப்பறைகள்

Update: 2022-08-12 17:26 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பழமையான அந்த பள்ளி வளாகத்தில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டப்பட்டன. சுமார் 6 மாதங்கள் ஆகியும் அந்த வகுப்பறைகள் திறக்கப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து புதிதாக கட்டுப்பட்டுள்ள வகுப்பறைகளை திறந்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-கமலநாதன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்