குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-12 14:53 GMT


தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் கிராமத்தில் ஆவக்குடி குளம் உள்ளது. இந்த குளம் பராமரிப்பின்றி கிடக்கிறது. குளத்தின் கரைகள் மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் குளம் தூர்வாரப்படாததால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தெக்கூர்.

மேலும் செய்திகள்