வெறிநாய்களால் மக்கள் அச்சம்

Update: 2022-08-12 14:45 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவற்றில் ஒரு சில நாய்கள் வெறிபிடித்து அப்பகுதியில் சாலையில் நடந்து செல்பவர்களை கடித்து குதறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புகூட சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை வெறி நாய்கள் கடித்துக்குதறியதால் அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்